Male Chauvinism@குத்துபாட்டு

பொண்ணுங்கள பொறக்க வச்சான்,
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்,
கருவ வச்சான் கற்ப வச்சான்,
கற்புக்குள்ள தீய வச்சான்,
தீய வச்சு எரிய வச்சான்...எரிய வச்சான்...எரிய வச்சான்..
மதுரை எரியது அனைங்கடா..அனைங்கடா..அனைங்கடா...

(Follwed by நக்கல் சிரிப்பு)

15 comments:

Anonymous said...

இதுல என்ன Male Chauvinism இருக்குது?

said...

இத ஒரு பின்நவினத்துவப்பரிமாணப்பார்வையிலப் பார்க்கணும் :).

Seriously though, பாட்டில் உள்ள அந்த நக்கல் தோணியும், அந்த நக்கல் சிரிப்பும்தான் ஆணாத்திக்க கூறுகள்.

என்ன பெரிய பெண்ணியம், நீ அதிகம் பேணும் கரு, கற்பு எல்லாம் மதுரை எரிவதில்தானே முடிந்தது என்று நக்கல் அடிப்பதாக தோன்றவில்லை?

Anonymous said...

//இத ஒரு பின்நவினத்துவப்பரிமாணப்பார்வையிலப் பார்க்கணும் :).
//

அத எப்படி பாக்கனும் ?

Anonymous said...

//
என்ன பெரிய பெண்ணியம், நீ அதிகம் பேணும் கரு, கற்பு எல்லாம் மதுரை எரிவதில்தானே முடிந்தது என்று நக்கல் அடிப்பதாக தோன்றவில்லை?
//

தோன்றவில்லையே...:(

said...

>>>>அத எப்படி பாக்கனும் ?

மல்லாக்க படுத்து தலைகீழா லென்ஸ திருப்பிப்புடிச்சு மேக்ரோ லெவல்ல எதையாவது கட்டுடைச்சுட்டே விளிம்பு நிலையைப்பற்றி சிந்துச்சுகிட்டே பாக்கணும். (கட்டு கூபாவுல வாங்குன சே படம் போட்டுருக்கற cigar கட்டா இருந்தா இன்னும் நல்லா தெரியும், சே படம் போட்ட டி-சர்ட் போட்டுகிட்டாலும் தெரிய வாய்ப்பிருக்கு).

said...

>>>>தோன்றவில்லையே...:(

நான் இதுக்கு முன்ன சொன்ன முறைல பாருங்க சுலபமாப்புரியும். அப்படியும் தெரியலைன்னா தெரிதா தெரிதா (கவனிக்கவும் தெரியுதா இல்ல தெரிதா)ன்னு கூவிக்கினே ஒரு வாரத்துக்கு முயற்சி பண்ணினால் தெரியும் சாத்தியங்கள் உண்டு!

Anonymous said...

//
மல்லாக்க படுத்து தலைகீழா லென்ஸ திருப்பிப்புடிச்சு மேக்ரோ லெவல்ல எதையாவது கட்டுடைச்சுட்டே விளிம்பு நிலையைப்பற்றி சிந்துச்சுகிட்டே பாக்கணும். (கட்டு கூபாவுல வாங்குன சே படம் போட்டுருக்கற cigar கட்டா இருந்தா இன்னும் நல்லா தெரியும், சே படம் போட்ட டி-சர்ட் போட்டுகிட்டாலும் தெரிய வாய்ப்பிருக்கு).

//


என்னங்க தெரியாம தன கேட்டேன். சின்னபயலுக்கு புரியுற மாதிரி விளக்கமா சொல்லாம..

கலாய்க்கிறிங்களே :((((

Anonymous said...

//

மல்லாக்க படுத்து தலைகீழா லென்ஸ திருப்பிப்புடிச்சு மேக்ரோ லெவல்ல எதையாவது கட்டுடைச்சுட்டே விளிம்பு நிலையைப்பற்றி சிந்துச்சுகிட்டே பாக்கணும். (கட்டு கூபாவுல வாங்குன சே படம் போட்டுருக்கற cigar கட்டா இருந்தா இன்னும் நல்லா தெரியும், சே படம் போட்ட டி-சர்ட் போட்டுகிட்டாலும் தெரிய வாய்ப்பிருக்கு).

//

அன்னே போதும் பொழச்சு போகட்டும் விட்டுடுடுங்க :)

said...

>>>>சின்னபயலுக்கு புரியுற மாதிரி விளக்கமா சொல்லாம.. கலாய்க்கிறிங்களே :((((

அய்யோ அய்யோ... நீங்க சரியாவே புரிஞ்சுக்கிடலை!

எச்சுஸூமி!

கலாய்தல் என்ற சொல்லே சென்ற செத்த நூற்றாண்டு நவினத்துவ உத்தம எழுத்தாளகள் துடைக்க மறந்த மனித மலத்துளி மிச்சங்கள். கலாய்த்தல் என்ற வார்த்தையில் புதையுண்டிருக்கும் 200 ஆண்டுகால எழுத மறந்த/மறுத்த வருத்த வரலாற்றை பறம்தள்ளுகிறீர்கள். அந்த வார்த்தையை உங்கள் சொல்லகராதியிலிருந்து முழுக்க நீக்கிவிட்டு மொக்கை என்ற பின்நவினத்துவபாணி வார்த்தைகளைக்கொண்டு நிரப்ப வேண்டிய கட்டாயதில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோமென்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

இப்ப மனசிலாயோ?

said...

>>>>அன்னே போதும் பொழச்சு போகட்டும் விட்டுடுடுங்க :)


சே... என் இறநூற்றாண்டு உலகிலக்கிய ஆய்வுகள் இப்படியா நசுக்கப்படவேண்டும். பாரிஸ் நகர பாப்பாகூட புரிந்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை so-called தமிழறிஞர்கள் ஒரு முறைக்கூட வாசித்தோ, உள்வாங்கியோ, ஒரு விவாதத்தையோ நடத்த துணிவில்லாத இயலாமையினால் பீடிக்கப்பட்டுள்ள அரட்டை அரங்க நாடகங்களால் மழுங்கடிக்கப்பட்ட தமிழனின் தறுதலைத்தனத்தை காறி துப்பினால்கூட துப்புதல் என்ற வினைக்கே கேவலமென்பது என் துணிபு!

நான் யாரைக் கொன்றேன், அவர்களைப் பொழைக்கவிடுவதற்கு... எழுத்தாளனோ, படைப்பாளியோ என்றுமே சாகடிக்கப்படுவதில்லை. படைப்பையும் படைப்பாளியும் தனிவேறு கூறுகள், நான் கொன்றது அல்லது கொன்றதாக உங்களை எண்ண வைத்தது ஒரு மொழிவிளையாட்டின் ஆரம்ப அதிகாரத்தின் முதல்வரி என்பதை விளக்கிக்கூற நிட்ஷேவை துயிலெழுப்பி தூசுதட்டி தெரிதாவும் ழான் பொட்றியாவும் நமக்கு ஸ்பானிஷ் டக்கிலா பரிமாறும் அந்த ஒரு சில கணங்களுக்குள் விவாதித்திட முடியுமா?

Anonymous said...

//சே... என் இறநூற்றாண்டு உலகிலக்கிய ஆய்வுகள் இப்படியா நசுக்கப்படவேண்டும். பாரிஸ் நகர பாப்பாகூட புரிந்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை so-called தமிழறிஞர்கள் ஒரு முறைக்கூட வாசித்தோ, உள்வாங்கியோ, ஒரு விவாதத்தையோ நடத்த துணிவில்லாத இயலாமையினால் பீடிக்கப்பட்டுள்ள அரட்டை அரங்க நாடகங்களால் மழுங்கடிக்கப்பட்ட தமிழனின் தறுதலைத்தனத்தை காறி துப்பினால்கூட துப்புதல் என்ற வினைக்கே கேவலமென்பது என் துணிபு!

நான் யாரைக் கொன்றேன், அவர்களைப் பொழைக்கவிடுவதற்கு... எழுத்தாளனோ, படைப்பாளியோ என்றுமே சாகடிக்கப்படுவதில்லை. படைப்பையும் படைப்பாளியும் தனிவேறு கூறுகள், நான் கொன்றது அல்லது கொன்றதாக உங்களை எண்ண வைத்தது ஒரு மொழிவிளையாட்டின் ஆரம்ப அதிகாரத்தின் முதல்வரி என்பதை விளக்கிக்கூற நிட்ஷேவை துயிலெழுப்பி தூசுதட்டி தெரிதாவும் ழான் பொட்றியாவும் நமக்கு ஸ்பானிஷ் டக்கிலா பரிமாறும் அந்த ஒரு சில கணங்களுக்குள் விவாதித்திட முடியுமா?//


போய்யா யோவ்

‍-- ‍ மஹெஷ்

said...

மஹெஷ் -

நோ டென்ஷன்!

புறக்கணிப்பும் பொல்லாத நோய்க்கூறுதான் என்று அரை பொத்தல் பியருடன், செவன்-அப்பும், இளநீரும் டாஸ்மார்க்கில் நண்பன் பணத்தில் ஓசியில் வாங்கி கலந்துகுடிக்கும் இலக்கியத்தின் சுவையை அறியாத அறிவு விஸ்தாரம் பெறாத சினிமாவையே தனது கலாச்சாரத்தின் அடையாளமாக கொண்டாடும் ஒரு பல வேடம் கட்டும் அவலச்சமூகக்கோமாளியின் ஒரு முகமூடியின் உள்ளிருத்து வரும் இருத்தவியல் போர்வையில் ஒலிந்த முதலாளித்துவக் குசும்பு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்! ஷ்ஷூ... போய்விடு நோயே!!

Anonymous said...

//இருத்தவியல் போர்வையில் ஒலிந்த முதலாளித்துவக் குசும்பு //

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? வலிக்குது, அழுதுடுவேன்.

said...

>>>>முகமூடியின் உள்ளே ஒலிந்துகொண்டவன் said...


அது எப்படி 'ஒலி'ந்து கொள்வீர்கள்? சத்தம் கேட்டு கண்டுபிடிச்சு கொடுத்துவிடப்போகிறார்கள்!

Anonymous said...

Good words.